Site icon Tamil News

கந்தகுளிய விமானப்படைத் தள குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த குழு

கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை துப்பாக்கிச்சூடு தளத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு இரண்டு நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version