Site icon Tamil News

சீனாவில் சுரங்க விபத்தில் 12 பேர் பலி

சீனாவின் வடகிழக்கு ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

குன்யுவான் சுரங்கத்தில் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜிக்சி நகரில் புதன்கிழமை பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் வியாழன் அன்று செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் ஏற்பட்டு வந்தது. எனினும், சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகளின் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது.

அதிலிருந்து சுரங்க விபத்து உயிரிழப்புகள் குறைந்தாலும், அத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

Exit mobile version