இலங்கையில் “கிளப் வசந்த” என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 21 வயதான குறித்த யுவதி செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.