Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடுமையான வெப்பமண்டல சூறாவளி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளியானது வரும் புதன்கிழமை அதன் கரையை கடக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிர்ரிலி புயல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியை தாக்கியதை விட அதிக அழிவை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கனமழை மற்றும் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version