Site icon Tamil News

சூடானில் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்பே மீண்டும் மோதல்

சூடானில் 3நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னே ராணுவத்திற்கும் துணை, ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் மூண்டது.

அந்நாட்டின் உளவுத்துறை அமைச்சகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டமை தொடர்ந்து தலைநகர் கார்டூமில் இயங்கி வந்த 2 துணை ராணுவ நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியது.

அதை தொடர்ந்து குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளில் இருதரப்பினக்கும் இடையே நாள் முழுவதும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல நாட்களுக்கு முன்பே குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்கனவே அங்கிருந்து பெரும்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version