Site icon Tamil News

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் காஷ்மீரில், குறிப்பாக இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு பகுதியில் அண்மை மாதங்களாகப் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஆக அண்மைய மோதல் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

அப்பகுதியில் இந்திய ராணுவத்தினரும் காவல்துறையினரும் அதிரடிச் சோதனை நடத்தியபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக காஷ்மீரில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவப் பிரிவு அதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது.

பயங்கரவாதிகள் கண் மூடித்தனமாக, சரமாரியாக சுட்டதில் பொதுமக்களில் இருவர் காயமடைந்ததாக இந்திய ராணுவம் கூறியது.

Exit mobile version