Site icon Tamil News

2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே மோதல் – இருவர் பலி 14 பேர் காயம்

கொலம்பியாவின் மெடலின் (Medellin) நகரில் 2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காயமுற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (29 ஏப்ரல்) நடந்த ஆட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்டிப்பென்டியென்டே டே மெடலின் (Independiente de Medellin) என்ற அணி 3-1 என அட்லட்டிக்கோ நேசியனோல் (Atletico Nacional) அணியிடம் தோற்றது.

ஆட்டம் முடிந்ததும் காற்பந்து அரங்க வளாகத்தில் அந்த 2 அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

கடந்த மாதத் (ஏப்ரல்) தொடக்கத்தில் அதே அரங்கத்தில்தான் அட்லேட்டிக்கோ நேசியனோல் அணி ரசிகர்களுக்கும் பொலிஸார் மோதல் ஏற்பட்டது.

தற்போது நடந்த சண்டை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 200 மில்லியன் பெசோ (சுமார் 43,000 டொலர்) வெகுமதி வழங்கப்படும் என்றும் மெடலின் நகர ஆளுநர் தமது Twitter இல் அறிவித்துள்ளார்.

Exit mobile version