Site icon Tamil News

ரஷ்யாவில் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ரஷ்ய போர் மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஏராளமான கடைகள், பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் 2024-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பெரிய கட் அவுட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

புத்தாடை, கேக் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்க வருவோர், சிறிது நேரம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்தனர்.

இதனிடையே, ரஷ்யாவில் பரவலாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளையும், வீடுகள்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களையும் 20 சென்டி மீட்டர் அளவுக்கு பனி மூடியுள்ளது.

Exit mobile version