Site icon Tamil News

அணுசக்தி பாதுகாப்பு குறித்து எச்சரிக்கும் சீனா!

அணு ஆயுதச் சம்பவத்தைத் தடுக்க ரஷ்யாவும் உக்ரைனும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீன தூதர்  வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில்,  சீனாவின்  யூரேசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லி ஹுய் மேற்படி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் அதிகரிக்கும் அபாயம் “இன்னும் அதிகமாக உள்ளது” எனவும்,  அனைத்து தரப்பினரும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம்  வெப்பநிலையை குளிர்விக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.

அவரது கருத்துக்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா மின் உற்பத்தி நிலையத்தின் மீது ஐ.நா அணுசக்தி கண்காணிப்பாளரின் பல எச்சரிக்கைகளையும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version