Site icon Tamil News

இளைஞர்களின் வேலையின்மை விகிதங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியது

கோவிட் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் சீனா கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், இளம் பட்டதாரிகள் வேலையின்மையால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய பட்டதாரிகள் கிராமப்புறங்களில் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது. இது நகர்ப்புற சீன வேலையின்மையின் விரைவான அதிகரிப்பில் உள்ளதை காட்டுகின்றது.

குறைந்த ஊதியம் மற்றும் வசதிகளுக்கு மத்தியில் இளம் சீன பட்டதாரிகள் கிராமப்புற வேலைகளை ஏற்க மறுத்ததால் சீனாவின் வேலையின்மை ஜூன் மாதத்தில் 21.3 சதவீதத்தை எட்டியது.

இந்த சாதனை மதிப்புகள் காரணமாக, சீனாவின் பொருளாதார நெருக்கடி உலகிற்கு இன்னும் அதிகமாகக் காட்டப்பட்டு வரும் பின்னணியில் இளைஞர்களின் வேலையின்மை புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக சீனா கூறியுள்ளது.

சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம், “தொழிலாளர் கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை மேம்படுத்துதல் அவசியத்தை மேற்கோள் காட்டி, நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பிற வயதினருக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதங்களை ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது.

Exit mobile version