Site icon Tamil News

கிழக்கு சீனக் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தும் சீனா!

கிழக்கு சீனக் கடலில் சில பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியானது இன்றும் (08.01), நாளையும் (09.01) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட பகுதிக்குள் கப்பல்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஷாங்காயின் நிதி மையத்திற்கு தெற்கே அமைந்துள்ள துறைமுக நகரங்களான நிங்போ மற்றும் ஜூஷான் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் பயிற்சிகள் நடைபெறுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version