பிரான்ஸில் மோதலுக்கு தயாரான 17 சிறுவர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர். அவர்களில் 15 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாலை 7 மணி அளவில் அப்பகுதியில் மிகப்பெரும் குழு மோதல் ஒன்றுக்கு தயாரானதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இதே குழு மோதலில் ஈடுபட்டிருந்தது. அதையடுத்தே பொலிஸார் சிறுவர்களை கைது செய்தனர்.
அவர்கள், சில நிமிடங்களில் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு மோதலுக்கு தயாராக இருந்த பல சிறுவர்களுடன் சண்டையிட தீர்மாதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.