மாவனெல்லயில் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் பேசிக்கொண்டிருக்கும்போது, தங்களை 30 வருடங்களாக ஏமாற்றிவருவதாக கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து கோபமடைந்த கபீர் ஹசீம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர் கூச்சலிட குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த, கபீர் ஹசீம் அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
கேள்விகேட்ட நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.