Site icon Tamil News

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக இங்கிலாந்து முழுவதும் வெப்பநிலை உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெப்பநிலை அதிகபட்சமாக 24C ஐ எட்டக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென்கிழக்கு வேல்ஸ் மற்றும் பிரிஸ்டல் சேனலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 24C பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வெப்பமான காலநிலை அடுத்த வாரமும் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

வானிலை அலுவலகத்தின் தலைமை முன்னறிவிப்பாளர் பால் குண்டர்சென் “இங்கிலாந்தின் வடக்கே அமைந்திருக்கும் விரிகுடா பகுதியில் நிலையற்ற வானிலை அமைப்புகள் காணப்படுவதாகவும், இதனால் அதிக  வெப்பமான காலநிலை ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version