Site icon Tamil News

இலங்கையில் 2050 ஆம் ஆண்டளவில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான புள்ளிவிபரம்

2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பர் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தரவு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை மொத்த சனத்தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய முதியோர் செயலகத்தின் தரவு அறிக்கைகள், 2050 ஆம் ஆண்டளவில், இந்நாட்டில் உள்ள முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 27.6% ஆக இருக்கும்.

இந்த நிலை 1971 இல் 06.3% என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Exit mobile version