Site icon Tamil News

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 வாரங்களில் புகைமூட்டத்தின் அளவு ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் வாய்ப்புக் குறைவு என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபரின் மீதமுள்ள நாள்களில் சிங்கப்பூரில் மழையை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

அது தென்கிழக்காசியாவின் தென் பகுதிகளுக்கும் பொருந்தும் என்பதனால் புகைமூட்ட நிலவரம் மேம்படுவதற்கு மழை உதவக்கூடும் என ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் முற்பாதியில் நிலவிய சூடான வானிலைக்கு மழை இதமாக இருக்கக்கூடும் என்று ஆய்வகம் கூறியது.

அடுத்த 2 வாரங்களுக்குப் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த வாரம் பிற்பகல் வேளையில் அதனை எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இம்மாதம் முற்பாதியில் பதிவான வெப்பநிலையைவிடப் பிற்பாதியில் பதிவாகும் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று ஆய்வகம் குறிப்பிட்டது.

Exit mobile version