Site icon Tamil News

அமெரிக்காவில் கொவிட் கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்காவில் கொவிட் நோய்க்கான கட்டுப்பாட்டு மையங்கள் தங்களது விதியை திருத்தியுள்ளன. அதாவது அவர்கள் பிறரிடம் இருந்து விலகியிருக்கும் கால அளவை குறைத்துள்ளன.

இதன்படி புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல் நீங்கிய ஒரு நாளுக்குப் பிறகு தங்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜென்சியின் இயக்குநர் டாக்டர். மாண்டி கோஹன், COVID-19 இலிருந்து கடுமையான விளைவுகளைத் தடுப்பதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்த மாற்றம் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுவாச வைரஸ்களிலிருந்து நம்மையும் பிறரையும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்க நமக்குத் தெரிந்த பொது அறிவு தீர்வுகளை நாம் இன்னும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version