Site icon Tamil News

பிரித்தானியாவில் இன்று மதியம் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இங்கிலாந்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இன்று (12) மதியம் 12 மணி முதல், இரவு 09 மணி வரை ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் மேலும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்து, சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து தற்போது மழையுடனான காலநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version