இங்கிலாந்தின் சில பகுதிகளில் வார இறுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மிட்லாண்ட்ஸ், வேல்ஸ் மற்றும் தெற்கு பிரிட்டனின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மின்வெட்டுக்கள் ஏற்படலாம் எனவும் இதனால் வணிகங்கள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கடுமையான இடி மற்றும் மின்னல் தாக்கம் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.