Site icon Tamil News

பதவியை ராஜினாமா செய்த சாட் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா

ஜனாதிபதித் தேர்தலில் இராணுவ அரசாங்கத் தலைவர் மஹமத் இட்ரிஸ் டெபியிடம் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, தனது ராஜினாமாவை கையளித்ததாக சாடியன் பிரதமர் சக்ஸஸ் மாஸ்ரா தெரிவித்துள்ளார்.

மாஸ்ரா,ஏப்ரல் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பாளர்.

எதிர்க்கட்சிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கையாக தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஜனவரி மாதம் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

“நான் எனது ராஜினாமாவையும் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் ராஜினாமாவையும் சமர்ப்பித்துள்ளேன், இது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் பொருத்தமற்றதாகிவிட்டது” என்று மாஸ்ரா கூறினார்.

40 வயதான டெபி, 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவரது தந்தை, இரும்புக்கரம் கொண்ட ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோ, கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், 15 ஜெனரல்கள் கொண்ட இராணுவ அரசாங்கத்தால் ஏப்ரல் 2021 இல் இடைக்கால ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

இறுதி முடிவுகளின்படி, மே 6ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டெபி 61 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

Exit mobile version