Site icon Tamil News

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து இரத்து!

மரம் முறிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் பாதையில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

வட்டவளை மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உதார மெனிகே புகையிரதமும் கலபடை நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மரத்தை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்தை சீரமைக்க முடியும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Exit mobile version