கலிஃபோர்னியாவில் ஏறக்குறைய 50000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா கடந்த சில நாட்களில் இரண்டு புயல்களை சந்தித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மழை மற்றும் மோசமான வானிலை நிலவுகிறது.
இதன்படி சாண்டா பார்பரா முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான பகுதியில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது.
அத்துடன் சுமார் 37 மில்லியன் குடியிருப்பாளர்கள் இப்போது வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.