Site icon Tamil News

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சிறிய தீவொன்றை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள கட்டிடத்திற்காக இலங்கையின் மின்சார சபையின் பொறுப்பில் உள்ள காணித்துண்டொன்றையும், சிறிய தீவொன்றையும் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளவதற்கான முன்மொழிவொன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (28.06) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக  கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனம் இலங்கையில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக முதலீடு செய்யவுள்ளது.

இதற்காக இலங்கை மின்சார சபையின் பொறுப்பில் உள்ள  மவுசகலே நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றையும்,  நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகைக்கு விடுவதற்கான முன்மொழிவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏற்புடைய நிறுவனங்களின் உடன்பாடுகளைப் பெற்றுக்கொண்டு,  முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Exit mobile version