Site icon Tamil News

இலங்கையில் தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்!

தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக, பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்வதற்காக, பாடத்துறை அமைச்சர் மூலம் பாராளுமன்றத்திற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு “தேசிய மகளிர் ஆணையம்” என்ற தலைப்பில் ஒரு சுயாதீன ஆணையத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Exit mobile version