Site icon Tamil News

இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 16 தங்க பிஸ்கட்டுகளுடன் தொழிலதிபர் கைது

சுமார் ரூ.43 மில்லியன் பெறுமதியான பதினாறு (16) தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் இந்த தங்கம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 08 பிஸ்கட்கள் அடங்கிய இரண்டு பொதிகளில் தங்கத்தை பொதி செய்து பக்கவாட்டு பையில் மறைத்து வைத்து தனது பயணப் பொதியின் கீழ் வைத்துள்ளார்.

டிராலியுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version