Site icon Tamil News

பேருந்துகளை தீவைத்து எரித்த விஷமிகள் : இலங்கையில் சம்பவம்!

இலங்கையில் பழுது பார்க்க கொண்டுவரப்பட்ட நான்கு பேருந்துக்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்துகள் இன்று (20.08) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள கார் பழுதுபார்க்கும் கடையொன்றில் இது இடம்பெற்றுள்ளது.  இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.

அருகில் இருந்த சிசிடிவி கமெராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பஸ்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version