Site icon Tamil News

பிரான்ஸில் வாக்கு வாதத்தின் போது பேருந்து சாரதி மீது கத்திக்குத்து

பிரான்ஸில் பேருந்து சாரதி மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Athis-Mons (Essonne) பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவருக்கும் பேருந்து சாரதிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததை அடுத்து, பேருந்து சாரதியை குறித்த நபர் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் கத்தி ஒன்றினால் அவர் குத்தப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சாரதி கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் நடத்தியவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மேலும் குறித்த நபரை பொலிஸார் முன்னதாகவே அறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version