Site icon Tamil News

யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 52 பேருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் இன்று பிற்பகல் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 52 யாத்திரிகர்கள் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பேருந்தில் பயணித்த 59 பேரில் 52 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும், இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version