Site icon Tamil News

மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து!! பலர் வைத்தியசாலையில் அனுமதி

பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாரம்மலவில் இருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் பின்னால் மற்றுமொரு பேரூந்து வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம பிடிபன நானோ தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக நாரம்மல மயூரபாத மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆறு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.

விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் பாதுக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version