Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 20 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் லொறி ஒன்று பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது  ஜிம்பாப்வேயின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு லிம்போபோ மாகாணத்தில் நேற்று (17.09) இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

 

 

Exit mobile version