Site icon Tamil News

எல்ல பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி!

எல்ல – வெல்லவாய வீதியில் இன்று (18.07) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உமா ஓயா திட்ட அலுவலகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பயணிகள் காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version