Site icon Tamil News

புத்தரின் மறு அவதாரம் என கூறிய புத்தப் பையன் கைது

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் “புத்த பையன்” என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு நேபாளி என்றும் புத்தரின் மறு அவதாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்களின் கூற்றுப்படி, அவர் இளமை பருவத்தில் தண்ணீர், உணவு அல்லது தூக்கம் இல்லாமல் பல மாதங்கள் நகராமல் தியானம் செய்ததற்காக பிரபலமானார்.

33 வயதான சந்தேகநபர் அவரைப் பின்பற்றுபவர்களை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் தலைமறைவாக வாழ்ந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட போது, ​​30 மில்லியன் நேபாள ரூபாய் ($225,000) மற்றும் மேலும் 22,500 டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களையும் பொலிசார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version