Site icon Tamil News

புயலை எதிர்கொள்ளவுள்ள பிரித்தானியர்கள் : கனமழைக்கும் வாய்ப்பு!

பிரித்தானியாவின்  வடக்கு-தெற்கு வரையான பகுதிகளில் கடுமையான புயலை எதிர்கொள்ளும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வாரம் முதல் 10 நாட்களுக்கு, வேல்ஸ், கும்பிரியா, மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர வானிலை முன்னறிவிப்பாளரான நெட்வெதரின் கணிப்புகள், ஐஸ்லாந்தில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அசோர்ஸில் இருந்து அதிக அழுத்தத்துடன், இங்கிலாந்தின் தென்-கிழக்கு கடற்கரையை தாக்குவதாக கூறப்படுகிறது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூடான நிலைமை காணப்படும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version