Site icon Tamil News

லெபனானில் உள்ள பிரித்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவு!

அவசரகால வெளியேற்றம் தேவைப்படும் பட்சத்தில், சைப்ரஸில் சுமார் 700 இங்கிலாந்து துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் உள்ள பிரிட்டன்களை “உடனடியாக வெளியேறுங்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையேயான முழுப் போர் பற்றிய அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்தின் அவசரகால கோப்ரா குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அனைத்து பிரித்தானியர்களும் “இப்போது” லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version