Site icon Tamil News

முக்கிய தொழிற்துறைகளுக்கான விசாக்களை கடுமையாக்கும் பிரித்தானியா !

ஐடி, தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் துறையில் திறமையான தொழிலாளர்கள் பிரிட்டனுக்கு வேலைகளை பெற்றுக்கொள்ள வருவதற்கான விசா தேவைகள் கடுமையாக்கப்படலாம் என்று உள்துறை செயலாளர் யவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட துறைகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் விசாக்களை பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்துவதும் இதில் அடங்கும்.

அவர்கள் பிரிட்டனின் பிராந்தியங்களின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் பார்க்க முடியும். இதில் சம்பள நிலைகள் வேறுப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக பிரிட்டனுக்கு வரும் பல்வேறு வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து தொடர்ச்சியான மதிப்பாய்வுகளை கேட்குமாறு அரசாங்கத்தின் இடம்பெயர்வு ஆலோசகர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இடம்பெயர்வு ஆலோசனைக் குழு “சர்வதேச ஆட்சேர்ப்புகளை நம்பியிருப்பதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள முக்கிய தொழில்களைப் பார்க்க வேண்டும்” என்று கூப்பர் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச ஆட்சேர்ப்புகளை நம்பியிருக்கும் துறைகளில் முதல் 10 இடங்களில் இந்தத் துறைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தத் துறைகளின் எதிர்கால தேவைகள் மற்றும் இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை MAC குறிப்பிட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

Exit mobile version