Site icon Tamil News

வடகொரியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளுக்கு ஆதரவாக பிரிட்டன், தென்கொரியா கையெழுத்திடும்!

வட கொரியா மீது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைகளை கூட்டாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதன்படி  இந்த வாரம் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மேற்கொள்ளும் அரசு முறை பயணத்தின் போது பிரிட்டனும் தென் கொரியாவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேசத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் கிழக்கு சீனக் கடலில் ஆட்கடத்தலைத் தடுப்பதற்காக பிரிட்டனின் ராயல் நேவிக்கும் தென் கொரிய கடற்படைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை இந்த ஒப்பந்தம் ஆதரிக்கும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Exit mobile version