Site icon Tamil News

பிரித்தானியா; பேருந்து கதவில் சிக்கிய பை … முன் சக்கரத்தின் கீழ் இழுபட்டு சென்ற மாணவி!

பிரித்தானியாவின் கார்லிஸ்லில் 14 வயது பள்ளி மாணவி பள்ளி பேருந்தில் கதவில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 4:10 மணி முதல் 4:15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் லண்டன் ரோட்டில் உள்ள செர்ட்ஸி மவுண்ட் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி மாணவி பஸிலிருந்து இறங்கும் போது அவருடைய பை பேருந்து கதவில் சிக்கி கொண்டுள்ளது , பேருந்து சாரதி மாணவி சிக்கி இருப்பதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதில், மாணவி பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் இழுபட்டு சென்றார்.

தகவல் அறிந்த உடனே அவசரகால சேவைகள் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.மாணவியின் கால் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கும்பிரியா காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Exit mobile version