Site icon Tamil News

தனது மனைவியை மீட்டு தாருங்கள் – நான்கு பிள்ளைகளுடன் தவிக்கும் கணவன்

சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற தனது மனைவியை மீள நாட்டிற்கு அழைத்து வருமாறு செல்லகத்தரகம, கொஹெம்ப திகனவில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்தா, அதிகாரிகளிடம் கோருகின்றார்.

சவூதி அரேபியாவில் வேலை கிடைக்காமல் மனைவி தவிப்பதாகவும் அவர் கூறுகிறார். நான்கு பிள்ளைகளின் தந்தையான சமில்சிறி அழுதுகொண்டே தனது மனைவியை மீள அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது மனைவி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக வெளிநாடு சென்றார், ஆனால் அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றாலும், அவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

கடந்த மாதம் (ஏப்ரல்) கொழும்பு ஏஜென்சியின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

தற்போது சவுதி அரேபியாவின் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறையில் சுமார் 10 பெண்கள் இருப்பதாகவும், அவர்களை விரைவில் காப்பாற்றுமாறும் அவர் தனது கணவருக்கு செய்தி அனுப்பினார்.

மேலும், தனது மனைவி தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்யுமாறு தனது மனைவி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிள்ளைகளை விட்டுவிட்டு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version