Tamil News

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் “ஆடுஜீவிதம்”

பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ஆடுஜீவிதம் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் இருந்து அடுத்தடுத்து தரமான படங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என மூன்று மாஸ் ஹிட் படங்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பட்டியலில் புதிதாக ஆடுஜீவிதம் படமும் இணைந்துள்ளது.

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இப்படத்தை பிளெஸி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக அமலா பால் நடித்துள்ளார்.

ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனால் ஆடுஜீவிதம் திரைப்படம் படிப்படியாக பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகி வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அந்த வகையில் அப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.50 கோடி வசூலித்து உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் அதிவேகமாக 50 கோடி வசூலை எட்டிய மலையாள படம் என்கிற சாதனையை ஆடுஜீவிதம் படைத்துள்ளது. இதே வேகத்தில் வசூலை வாரிக்குவித்தால் இப்படம் அடுத்த சில தினங்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Exit mobile version