Site icon Tamil News

மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்னஞ்சள் மூலம் கிடைக்கப்பெற்ற குறித்த மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் தங்களை “Funing எனப்படும் பயங்கரவாத குழு” என்று அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண் பொலிஸார், பல மணி நேரம் தேடியும் எதையும் மீட்கவில்லை.

தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version