Site icon Tamil News

பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இன்று (01.12) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலம் வந்த குறித்த அச்சுறுத்தலால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் சந்தேகப்படும்படியான பொருட்களை கண்டறிந்து மீட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் வெளியேற்றியுள்ளனர் மற்றும் பள்ளி அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை முன்கூட்டியே வந்து அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version