Site icon Tamil News

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : தலிபான்கள் மீது வலுக்கும் சந்தேகம்!

வடக்கு பாகிஸ்தானில் சாலையோர பகுதியில் குண்டு வெடித்ததில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலும் எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.  ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து  தலிபான்கள் மீது சந்தேகம் வரக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் குழு, அப்பகுதியில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் தலிபான்களிடமிருந்து தனித்தனியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version