Site icon Tamil News

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்

பூமியில் வேற்று கிரகவாசிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வேற்று கிரகவாசிகள் குறித்த அனைத்து தகவல்களும் அமெரிக்க அரசுக்கு தெரியும் எனவும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சியாளர் லூயிஸ் எலிசாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

ஏலியன் தொழிநுட்பத்தை படிப்பதில் தான் பொறுப்பு என்றும், பென்டகனில் வேற்று கிரக வாழ்க்கையின் தலைவன் தான் என்றும் எலிசாண்டோ கூறினார். கடந்த 20ஆம் திகதி, லூயிஸ் எலிசாண்டோ இன்சைட் தி பென்டகன்ஸ் ஃப்ளையிங் மேன்ஹன்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார், அது குறித்த பேட்டியன் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

 

 

 

1947இல் நியூ மெக்சிகோவில் நடந்த ரோஸ்வெல் சம்பவத்தில் நான்கு வேற்று கிரகவாசிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக லூயிஸ் எலிசாண்டோ கூறினார், இது பெரியவர், சிறியவர் என அனைவரும் அறிந்ததே. மனிதர்களில் இருப்பதாகக் கூறப்படும் வேற்றுகிரகவாசிகளின் உள்வைப்புகளையும் அமெரிக்க அரசாங்கம் கண்டறிந்துள்ளதாகவும், மனிதர்களிடமிருந்து வேற்றுக்கிரகவாசிகளின் உயிரியல் மாதிரிகள் மற்றும் திசு மாதிரிகள் அகற்றப்பட்டதை அவர்கள் பார்த்ததாகவும் எலிஸாண்டோ கூறினார்.

தன்னையும் ஆராய்ச்சியாளர்கள் குழுவையும் வேற்று கிரகவாசிகள் உளவு பார்க்க முயற்சித்த நேரங்கள் இருந்ததாகவும், பென்டகனைப் பார்வையிடும் திறன் அவர்களுக்கு இன்னும் இருப்பதாகவும், எனவே அவர்கள் சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எலிசாண்டோ கூறினார். மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version