Site icon Tamil News

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சிக்கிய படகு : அவசர அழைப்பு விடுத்த ஐ.நா!

இந்தியப் பெருங்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே படகொன்று சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் 185 பேர் பயணித்த நிலையில், அவர்களை மீட்க ஐக்கிய நாட்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

கப்பலில் இருந்தவர்களில் 70 பேர் குழந்தைகள் மற்றும் 88 பேர் பெண்கள் என்று UNHCR அகதிகள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறைந்தது ஒரு டஜன் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது, ஒரு நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மியான்மரில் கடுமையாக துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் ரோஹிங்கியாக்கள், ஒவ்வொரு ஆண்டும் மியான்மரில் இருந்து ஆபத்தான கடல் பயணங்களை செய்து, பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களையும், மலேசியா அல்லது இந்தோனேசியாவை அடைய முயற்சி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version