Site icon Tamil News

கிழக்கு ஏஜியன் தீவில் விபத்துக்குள்ளான படகு : மூவர் உயிரிழப்பு!

கிழக்கு ஏஜியன் தீவான சமோஸ் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.  05 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை எனவும், எவ்வகையான படகு விபத்துக்குளானது என்பதை அறியமுடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று கடலோர காவல்படை ரோந்து படகுகள் இணைந்து மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்டவர்களின் அடையாளங்கள் அல்லது நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது மீட்கப்பட்ட மூன்று உடல்கள் குறித்த உடனடி தகவல் எதுவும் இல்லை.

மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு வழியாக பயணித்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version