அண்டார்டிகாவின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தற்போதுள்ள பென்குயின் காலனிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், அண்டார்டிகா முழுவதும் பறவை காய்ச்சல், எச்5என்1 வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியானது.
அன்றிலிருந்து, இது கடல் அர்ச்சின்கள் மற்றும் பெங்குவின் போன்ற பறவைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பறவைக் காய்ச்சல் உள்ள பறவைகள் முதன்முறையாக அண்டார்டிக் நிலப்பரப்பில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன.