Tamil News

பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்த பணப்பெட்டி… வெளியேற போகும் நபர் யார்?

கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த வாரமும்.

ஏனென்றால் யார் அந்த ஒரு நபர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 7ல் உள்ள சில போட்டியாளர்கள் பணபோட்டியுடன் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டு வைத்துவிட்டனர்.

விசித்ரா, மாயா, மணி ஆகிய நபர்களில் ஒருவர் தான் பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேற போகிறார்கள் என கூறப்படுகிறது. அதே போல் மறுபக்கம் ரூ. 10 லட்சம் வந்தால் பணப்பெட்டியுடன் வெளியேறிவிடலாம் என தினேஷ் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டிற்குள் பணப்பெட்டி வந்துவிட்டது. முதலில் ரூ. 1 லட்சம் தொகையுடன் ஆரம்பித்த நிலையில் ரூ. 5 லட்சம் வரை சென்றுள்ளது. இதற்குமேல் எத்தனை லட்சம் அதிகரிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version