Site icon Tamil News

பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் எவிக்‌ஷன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் mid week eviction நடந்துள்ளதாகவும் அதில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் போட்டி கடுமையாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் எலிமினேஷன் நடக்கும்.

கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக கனமழை வெளுத்துவாங்கியதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர்.

Ĺஇதன் காரணமாக அவர்களால் வாக்களிக்க முடியாமல் போன காரணத்தினால் கடந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என அறிவித்தது பிக்பாஸ் டீம். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

அனன்யா ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனவர் ஆவார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றார் அனன்யா.

இந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அவர் சைலண்ட் மோடிலேயே இருந்ததால் மக்கள் மத்தியில் அவருக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

Exit mobile version