Tamil News

நான் உங்களுக்குத் தான் பிறந்தேனா?? பெற்றோரிடம் கேட்ட சாய் பல்லவி

சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசுவதை வழக்கமாக வைத்துள்ள பயில்வான் தற்போது நடிகை சாய் பல்லவி குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர், “சாய் பல்லவி அவருடைய பெற்றோரிடம் ஒருமுறை நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? என்று சண்டை போட்டுள்ளார்”.

“காரணம் என்னவென்றால் பெற்றோர்கள் கருப்பாக இருக்கும் நான் மட்டும் எப்படி வெள்ளையாக வித்தியாசமாக இருக்கிறேன். உண்மையில் உங்களுக்கு தான் பிறந்தேனா? இல்லை வேறு யாரிடமாவது இருந்து என்னை தத்து எடுத்து வந்து விட்டீர்களா? என்று சாய் பல்லவி கேட்டு இருக்கிறார்”.

“அதற்கு பெற்றோர்கள், எப்படி உன்னுடைய தங்கை உன்னை போலவே இருக்கிறாள் என்று கூறி இருக்கின்றனர்”.

“சாய் பல்லவி மருத்துவம் படிக்கும் போது தான் கருப்பாக இருக்கும் பெற்றோர்களுக்கு வெள்ளையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது என தெரிந்து கொண்டார்”. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்திருக்கிறார்.

Exit mobile version