Site icon Tamil News

மட்டக்களப்பு- பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்து விற்பனை: நீதிமன்றம் பிரயோகித்த உத்தரவு

மட்டக்களப்பு நகரில், விற்பனை செய்யப்பட்டு வந்த பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்ட பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் உட்பட இருவரை 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் குறித்த பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டார்.

அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த மிகஸ் புரூட், மாம்பழம், வகைகளை கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை வாங்கி குடித்த பொதுமக்கள் பலர் குறித்த பழச்சாற்றின் சுவையில் அதிகளவு கச்சல் தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனா.

இனையடுத்து குறித்த ஹோட்டலை கடந்த ஒக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 200 மில்லி லீற்றர் பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அந்த கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுடன் கைப்பற்றப்பட்ட பழச்சாறு போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து மிஸ்புரூட், மாம்பழம், பழச்சாற்றுக்களை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்தன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்ஃபர்டை, ஆக்சைடாக சல்பைட், பென்சோயிக் அமிலம் ஆகிய கலவைககளின் உள்ளடக்கம்; அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உதந்தது அல்ல என இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின்; 2,ம் 3ம் எதிரிகளான கம்பனி முகவர் கம்பனி உரிமையாளர் இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் குறித்த நாமம் கொண்ட பழச்சாற்று போத்தல்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்

Exit mobile version